அனுராதபுரம் சன நூதனசாலை
1971 அகஸ்ட் 22 ஆந் திகதி தேசிய நூதனசாலையின் ஒரு பிராந்திய கிழையாக அனுராதபுரம் சன நூதனசாலையை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நூதனசாலையினை ஆரம்பிக்கும் நோக்கம் என்னவென்றால் நுவர கலாவியப் பகுதி பண்டைய மக்களின் சமூக கலாசார, சமய மற்றும் பொருளாதார விடயங்கள் பிரதிபளிக்கின்ற பொருட்களை சேகரித்து, பாதுகாத்து காட்சிக்காக வைப்பதாகும். நுவர கலாவிய என்பது, நுவர வாவி, கலா வாவி மற்றும் பதவிய வாவி என்ற பண்டைய வாரி தொழில்நுட்பத்தினால் வளம்பெற்ற பிரதேசமாகும். கி.மு.12-13 என்ற நூற்றாண்டுகளில் வெளிநாட்டடவ ஆக்கிரமிப்புகளினால் அனுராதபுரம் இராசதானி, தென்மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து போக ஆரம்பித்த பின்னர் இராசரட்டையில் எஞ்சிய மக்கள் வாழ்ந்துவந்த கிராமங்கள் வெளிப்புர தொடர்வுகளினால் மீக்கப்பட்டு இருந்த காரனத்தினால் துண்டிய கிராமங்களாக அழைக்கப்பட்டன. துண்டிய கிராமங்களில் வாழ்ந்துவந்த கிராமத்து மக்கள் பாதுகாப்பு மற்றும் அன்றாட சோலிகளின் நன்மைக்காக நெறுங்கிய முறையில் தற்தமது இல்லங்களை அமைத்துக்கொண்டனர். அவர்கள் சுற்றுப்புரச் சூழலில் இருந்து தமக்கு தேவையான அனைத்தையும் அளித்துக்கொண்டு மிகவும் ஏளிய வாழ்வை மேற்கொண்டனர். இவ் விடயம் அவர்களின் இல்லரங்கள், உபயோகித்துள்ள கருவிகள், பின்பற்றிய சமய பழக்கவழக்கங்கள், துணிமணிகள் உட்பட்ட கலாசாரத்தினால் மிக தெளிவாகவே காணகூடியதாக இருந்தது. அனுராதபுரம் கிராமிய நூதனசாலையை பார்வையிடும் ஒருவருக்கு மேற்கூறிய துண்டப்பட்டுள்ள கிராமங்களில் நிலவிய விவசாயம், மருத்துவம், வீட்டு உபகரணங்கள், மார்க்க வழிபாடுகள், விளையாட்டுகள் மற்றும் அணிந்த துணிமணிகள் போன்றே அன்று நிலவிய ஏனைய தொழில்களுடன் இணைந்த மிக அருமையான பொருற்களை பார்வையிடலாம். அதுபோன்றவே நூதனசாலை கட்டிடத்தினுள் நுழைவோருக்கு வெளிப்புரத்தில் நிர்மாணித்திருக்கும் கிராமிய வீடு, பல நெல்லட்டாலைகள், உண்மை பிரமானத்திலான குரக்கன் அட்டாலையின் மாதிரியினையும் கண்டுரசிக்கலாம். |
||||||||||||
|
||||||||||||
அவதானத்திற்கு: |
||||||||||||
|
Image Gallery : அனுராதபுரம் சன நூதனசாலை |